
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டவுடன் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி.யில் கறிக்கோழிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இதற்கு விதிக்கப்பட்ட 14.5 சதவீத விற்பனை நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 மாதமாக 14 லட்சம் கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது-
இதனால் கறிக்கோழியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டது. மே மாதம் ரூ.210-க்கும், கடந்த 2 ஆம் தேதி ரூ.220 ஆகவும், நேற்று ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.