தினகரன் ஜாமீன் கோரி மனு...!!! - நாளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : May 17, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
தினகரன் ஜாமீன் கோரி மனு...!!!  -  நாளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

dinakaran demanding petition for bail

டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக  அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடை தரகர்களாக செயல்பட்ட சுகேஷ் சந்திரா, நரேஷ் உள்பட சிலரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டிடிவி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரா ஆகியோர் பலமுறை செல்போனில் பேசியுள்ளனர். அதன், குரல் பதிவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களது குரல் பதிவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மேலும், குரல் பதிவை ஆய்வு செய்ய வேண்டும் என போலீசார், நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு டிடிவி.தினகரன், சுகேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வரும் 29ம் தேதி வரை டிடிவி.தினகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டிடிவி.தினகரன் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்த விசாரணை, நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!