டீசல் விலை ரூபாயை எட்டும் தூரத்தில் உள்ளது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
சென்னை: டீசல் விலை ரூபாயை எட்டும் தூரத்தில் உள்ளது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வரலாறு காணாத விலையில் இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து ரேஸ் குதிரை போல நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மறுபுறம் டீசல் விலையும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் 30 காசுகள் உயர்ந்து ரூ.103.31 காசுகளா உள்ளது.
டீசல் விலை 100 ரூபாயை தொட உள்ளது. ஒரு லிட்டர் 34 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.99.26 காசுகளாக இருக்கிறது. மிக விரைவில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயை எட்டிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். தொடரும் விலையேற்றம் அத்தியாவசிய பொருட்களின் மீதான விலையிலும் பாதிக்கும் என்பதால் நடுத்தர மக்கள் கவலையில் இருக்கின்றனர்.