ஏடிஜிபி சஞ்சீவ் குமார் மரணம் - உயரதிகாரிகள் அஞ்சலி

First Published Mar 5, 2017, 4:33 PM IST
Highlights
dgp sanjay kumar death


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். 1986 ஆம் ஆண்டு காவல் பணியில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இணைந்த சஞ்சீவ் குமார் உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் பரியாற்றி உள்ளார்.

கடைசியாக சென்னை தலைமையிட கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றி வந்தார். இதையடுத்து, அவர் சமீப காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சஞ்சீவ்குமார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அவரது உடலுக்கு டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நாளை காலை திருவல்லிக்கேணி ஐ.பி.எஸ் அதிகார்கள் குடியிருப்பில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கபடுகிறது. பின்னர், பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

click me!