சிறுவாபுரி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்! 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Published : Jun 03, 2025, 06:40 PM IST
murugan temple

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமையன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

சிறுவாபுரி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நாட்களிலும் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம் 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும் செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.3,000 ரொக்கம் + பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி