அண்ணா நூலகத்தை ஸ்டாலினுடன் சுற்றிப்பார்த்த கெஜ்ரிவால்..! அசந்து போய் என்ன சொன்னார் தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Sep 5, 2022, 3:46 PM IST
Highlights

அண்ணா நுற்றாண்டு  நூலகத்தைப் பார்வையிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெரிய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

ஆசியாவின் மிகப்பெரிய நூலகம்
 
உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண்" திட்ட தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க  தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியையடுத்து சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூலகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வசதிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகம். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள், 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தூலகம் 3.75 லட்சம் சதுரடி 8 ஏக்கர் நிலப்பரப்பில் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களைக் கொண்டு அமைதுள்ளது. இந்த நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இந்நூலகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடனும்" (World Digital Library), யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 6.2 இலட்சம் நூல்கள் உள்ளன.இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. 

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவது இலவசம் இல்லை.. அது அரசின் கடமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடல் பூதம் நிகழ்ச்சியை பார்வையிட்ட கெஜ்ரிவால்

இத்தகைய சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,  தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை இன்று அழைத்துச் சென்று, முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கான நிகழ்வாக முனைவர் வேலு சரவணன் அவர்கள் வழங்கிய “கடல் பூதம்” நிகழ்ச்சியை பார்வையிட்டார்கள் மேலும் தில்லி முதலமைச்சர் ஆறாம் தளத்தில் உள்ள பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு, ஏழாம் தளத்தில் உள்ள ஓலைச் சுவடி பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், நூலகத்தின் எட்டாம் தளத்தில் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்களுக்கு மாதிரிப் பள்ளிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டு மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி அச்சத்தில் உளரும் ஆர்.எஸ் பாரதி.! கைவைத்து பாருங்கள் வேதனைப் படுவீர்கள்- பாஜக

அண்ணா நூலகம் இந்தியாவின் பெருமை

அதனைத் தொடர்ந்து தில்லி முதலமைச்சர் அவர்கள் அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலுள்ள மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அம்மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த புகைப்பட விளக்கப் புத்தகத்தை (Coffee Table Book) வழங்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட பின்பு,  தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , நூலகத்தின் வருகைப் பதிவேட்டில், "It's a pleasure to visit this library. Such huge collection of books and manuscripts SO well managed and kept. It's not just Tamil Nadu's pride but India's pride. Keep it up." என்று தனது கருத்தினை எழுதி கையொப்பமிட்டார்.

இதையும் படிங்கள்

ஆதரவாளர்களை சந்திக்கும் மு.க அழகிரி...! மீண்டும் அரசியல் பிரவேசமா..? பதில் என்ன..?

click me!