தங்கம் வென்று சாதனைப் படைத்த தென்காசி மாணவி…

First Published Dec 12, 2016, 12:27 PM IST
Highlights


தென்காசி,

தென்காசியைச் சேர்ந்த மாணவி, சிறப்புநிலை யோகா போட்டியில் முதல் பரிசு பெற்று, தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் அவர், காமன்வெல்த் போட்டியில் பங்கு பெறும் தகுதியைப் பெற்றுள்ளார்.

அமெச்சூர் ஆசியன் யோகா கழகம் மற்றும் உலக யோகா பெடரேசன் அமைப்பு சார்பில் ஆசியன் யோகா போட்டிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.

இதில் 12 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண்கள் பிரிவில் தென்காசி புனித மிக்கேல் பள்ளி மாணவி நந்தினிதேவி சிறப்பு நிலை யோகா போட்டியில் முதல் பரிசு பெற்று தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் பங்கு பெறும் தகுதியை மாணவி நந்தினிதேவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை படைத்த மாணவி, யோகா ஆசிரியர் குருகண்ணன் ஆகியோரை அமைச்சர் இராஜலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொது மக்கள் என அனைவரும் பாராட்டினர்.

click me!