பழைய காதலனுடன் சேர்ந்து புதிய கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய பெண்... கணவரும் தற்கொலை! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

First Published Aug 1, 2018, 10:18 AM IST
Highlights
Countering with two people at the same time


தன்னுடைய பழைய  காதலனுடன் சேர்ந்து பெண் தனது கள்ளக் காதலனை  தீர்த்துக்கட்டிய தால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரான பூபதி கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக பெண் ஊழியரான சவுந்தர்யாவிடம்   போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், சவுந்தர்யாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் . இவர் கரூர் மாவட்டம் குளித்தலையில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டார்.  கணவன்-மனைவி இருவரும் குளித்தலையில் வசித்து வந்தனர்.  சவுந்தர்யா திருமணத்திற்கு முன்பாக  சொந்த ஊரில் உள்ள ஒருவரை  காதலித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அந்த காதலை  அவருடன் தொடர்ந்துள்ளார். இந்த விஷயம் கணவர் சுரேசுக்கு  தெரிந்ததால் அவர் சவுந்தர்யாவை  காதலைக் கைவிடும்படி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிடையே அடிக்கடி  பிரச்சினை  வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட  மடவுடைச்சலில் சுரேஷ் தற்கொலை செய்திருக்கிறார்.

அதன் பிறகு கணவர் இறந்ததால்  கருணை அடிப்படையில் சவுந்தர்யாவிற்கு வேளாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு சேர்ந்துள்ளார்.

இதன் பின்னர் முன்னாள் காதலன் நவல்பட்டு அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். சவுந்தர்யாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்தநிலையில் சவுந்தர்யாவுக்கு அலுவலகத்தில் பணியில் இருந்த பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது.  பூபதி கண்ணன் திருச்சி ராஜா காலனியில் இருந்து தினமும் புதுக்கோட்டைக்கு காரில் சென்று வந்த போது, சவுந்தர்யாவையும் உடன் அழைத்து சென்றார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் சவுந்தர்யாவின்  பழைய காதலனுக்கு தெரிந்துள்ளது.  இதனையடுத்து புதிய கள்ளக் காதலனான பூபதி கண்ணனுடனான  தகாத பழக்கத்தை கைவிடுமாறு சவுந்தர்யாவை கண்டித்துள்ளார்.

 இந்த சூழலில்,  சவுந்தர்யாவுக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது பூபதி கண்ணனுக்கு  தெரிந்ததால் சவுந்தர்யாவை அவர் கண்டித்தார். ஒரே நேரத்தில் 2 பேரிடமும் சவுந்தர்யா தகாத தொடர்பு வைத்திருந்ததால், பூபதி கண்ணனின்  கடுமையாக கண்டித்துள்ளார் இதனால் கடும் மனவுளைச்சலுக்கு ஆளான சவுந்தர்யா. தனது பழய  கள்ளக்காதலனிடம் அழுது புலம்பியிருக்கிறார். இதனால் புதிய கள்ளக்காதலனான பூபதி கண்ணனை கொலை செய்ய பழைய கள்ளக்காதலனுடன் சவுந்தர்யா திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று பூபதி கண்ணனுடன் காரில் வந்த போது, மாத்தூர் அருகே அரைவட்ட சுற்றுச்சாலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் வைத்து பூபதி கண்ணனை கொலை செய்துள்ளனர். இதையடுத்து  பழைய கள்ளக்காதலனை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம் என்ற  தகவலை போலீசார் தெரிவித்தனர்.

 தொடர்ந்து போலீசார் நடத்தி வரும் இந்த விசாரணையில் ஒவ்வொரு நாளும்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பூபதி கண்ணனை கொலை செய்தது எப்படி? எத்தனை பேர் என்பது பற்றி இன்னும் முழுமையாக தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

click me!