தொடங்கியது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்…! சென்னையில் எத்தனை இடங்களில்.. முழு விவரம்

By manimegalai aFirst Published Oct 3, 2021, 7:46 AM IST
Highlights

தமிழகத்தில்ல் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி உள்ளது.

சென்னை: தமிழகத்தில்ல் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களை நடத்துவதில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக வாரம் தோறும் தமிழகம் முழுவதும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

முதல் முகாம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது அந்த முகாமில் 28. 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தொடர்ந்து செப்டம்பர் 19ம் தேதி 2வது முகாம் நடத்தப்பட்டது. 3வது முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந் நிலையில் 4வது தடுப்பூசி முகாம் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் 4வது கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இன்று 25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள முகாம் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 1600 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

 

click me!