தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 2:08 PM IST
Highlights

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

16.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌ (மலைப்பகுதுகள்‌), தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.07.2022. 18.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌ (மலைப்பகுதிகள்‌), தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி
மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.07.2022. 20.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழகம் வரும் செஸ் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை கட்டாயம்

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி
செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

 மீனவர்களுக்கான எச்சரிக்கை :

16.07.2022: மத்திய மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

17.07.2022: மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேலும் படிக்க:அரிசி ஆலைகள் அடைப்பு.. ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி வேலை நிறுத்த போராட்டம்.. அரிசி விலை உயரும் என எச்சரிக்கை

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!