மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்... உறுதியளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

Published : Apr 21, 2022, 04:26 PM IST
மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்... உறுதியளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தமிழக சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தமிழக சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். மேலும் பல துறைகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இதுமட்டுமின்றி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். முன்னதாக அதிமுகவைச் சார்ந்த உறுப்பினர் அருண்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர் உதயநிதி ஆகிய இருவரும் மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பேசியதோடு, அதையொட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதுக்குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது அந்தத் துறையை தன் கையில் வைத்துக் கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிமுகவைச் சார்ந்த உறுப்பினர் அருண்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர் உதயநிதி ஆகிய இருவரும் மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பேசியதோடு, அதையொட்டி வைத்த கோரிக்கைகளை அனைத்தையும் நான் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்டு இருக்கக் கூடிய ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்டு இருக்கக் கூடிய அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன. என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம். அதனால் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய நன்மைகள் என்ன, இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும். படிப்படியாக அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதை இங்கு பேசிய உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் இதை ஓர் அறிவிப்பாகவே நான் அறிவித்து அமைகிறேன் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!