
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா பகுதியில் தனது வழக்கமான நடைப்பயணத்தின் போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரம் முன்னேற முன்னேற மக்களிடையே எழுச்சியும் ஆதரவும் அதிகரித்து வருவதாகவும், திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். முன்னதாக, சென்னைக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற சிறப்புத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், நகரின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்துவோம் என உறுதி அளித்தார்.