ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!

ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!

Published : Jul 17, 2026, 08:11 PM IST

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் சுமார் 133 கிமீ தூரம், 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது மழை பெய்ய தொடங்கிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் குடை கூட பிடிக்காமல் நனைந்தபடியே ஆய்வு மேற்கொண்டார். சாலை பணிகள் குறித்த வரைபடங்களுடன் அதிகாரிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு விளக்கி எடுத்துரைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருச்சியில் இருந்து 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு அடைந்தாலும், செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வந்து சேர மேலும் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், சென்னைக்குள் வர போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாகவும், கடந்த 30 - 40 ஆண்டுகளாக போக்குவரத்தை சீர் செய்ய முறையான திட்டங்கள் ஏற்படுத்தவில்லை என கூறினார். சென்னைக்கு உள்ளே வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் தனியே திட்டம் வகுத்து வருவதாகவும், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திற்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் இந்த சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் உலகத்தரத்தில் 6 வழி பாதைகளாக மாற்றப்பட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்றார். ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்காக களத்திற்கே வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு, மணல் குவாரிகள் திறப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து ஆதார் அர்ஜுனா புறப்பட்டு சென்றார். மேல்மட்டங்களில் இல்லை என்று சொல்வதை விட ஊழல் ஒழித்தாகிவிட்டது எனவும், கீழ் மட்டத்தில் விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

03:47ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!
03:41கொள்ளைக் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்! - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
07:09உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!
05:39திமுக செய்த தவறை தவெக செய்யக் கூடாது! இல்லையெனில் போராட்டம்.! விஜய் அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
02:42Poes Garden : 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
02:44ஆடி மாதப் பிறப்பு : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!
03:00தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
02:16Job Opportunities : வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
02:09Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?