
ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார். இணை அமைச்சர் டோகன் சாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நகர்ப்புற போக்குவரத்து திறன் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “A city’s living standards are reflected in the reliability and quality of its public transport.
இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!
#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.