தீக்குளித்த மனைவி இறப்பு; காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் தீ பற்றியதால் தீவிர சிகிச்சை...

First Published Aug 7, 2018, 9:34 AM IST
Highlights

கடலூரில், குடும்ப பிரச்சனையால் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மனைவியை காப்பாற்ற முயன்றதால் கணவர் மீதும் தீ பற்றிக் கொண்டது. 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருக்கேவுள்ளது கூடுவெளி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், அவரது மனைவி கற்பகவள்ளி. இத்தம்பதிக்கு ராபின் என்ற மகன் உள்ளார். 

கணவன், மனைவி இடையே கடந்த சில வாரங்களாக பிரச்சனை இருந்து வந்ததாம். இந்த நிலையில் ராஜேந்திரன் மீன் வாங்கி கொண்டு வந்து சமைத்து தரும்படி மனைவி கற்பகவள்ளியிடம் கூறியுள்ளார். அப்போது முடியாது என்ற கற்பகவள்ளி மறுத்ததால் அவரை திட்டியுள்ளார் கணவன் ராஜேந்திரன். 

இதில், மனம் உடைந்த கற்பகவள்ளி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டார். பின்னர், தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து நெருப்பு வைத்துகொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என்று கற்பகவள்ளி மீது பற்றி எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டார், அப்போது ராஜேந்திரன் மீதும் தீ பற்றிக் கொண்டது. இதில், கணவன், மனைவி இருவரும் அலறினர். 

அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்து கணவன், மனைவி இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தனர். பின்னர், இருவரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இவருவரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மருத்துவர்களால் கற்பகவள்ளியை காப்பாற்ற முடியவில்லை. ராஜேந்திரனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிதம்பரம் தாலுகா காவலாளர்கள் கற்பகவள்ளி தீ குளித்ததற்கான காரணம் என்ன? என்று விசாரித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!