தொடரும் லாக் அப் டெத் மரணங்கள் ..? டிரெண்டாகும் #JusticeForManikandan..

By Thanalakshmi VFirst Published Dec 6, 2021, 4:36 PM IST
Highlights

இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லபட்ட மணிகண்டன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுகொண்டுள்ளார்.
 

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாக்கியதில்தான் மாணவர் இறந்தார் எனக்கூறி, அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணக்குமார். இவரது மகன் மணிகண்டன். இவருக்கு வயது 21. கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4 ஆம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, மணிகண்டனை போலீசார் விரட்டிச் பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர் அன்று இரவு மணிகண்டனின் தாயாரை வரவழைத்து மணிகண்டனை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லபடுகிறது. மேலும் அவரது ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். அதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீசார் கொடூரமாக தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தார் எனக் கூறி, முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, குற்றப் பிரிவு டிஎஸ்பி திருமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

ஆனால், எனது மகன் மரணத்திற்கு காரணமாக போலீசாரை கைது செய்யவேண்டும் எனவும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், மணிகண்டன் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மணிகண்டன் பிறந்த நாளில் அவர் உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் மணிகண்டன் மரணத்திற்கு நீதி  கேட்டு  #JusticeForManikandan என்கிற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட அவர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!

வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி

1/2 pic.twitter.com/3Be4Q8mofw

— K.Annamalai (@annamalai_k)
click me!