
திருச்சியில் உள்ள முன்னாள் பள்ளி இடைநிலைக் கல்வித்துறை அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ், காவல்துறை விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்றும் கூறினார். மேலும் சட்டரீதியாக இவைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.