உண்மை தான்! விஜய்க்கு செல்வாக்கு இருக்கு! அதிமுக ஒன்றிணைய வேண்டும்! ஒரே போடு போட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்!

Published : Sep 17, 2025, 01:47 PM IST
EPS vs TVK VIjay

சுருக்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் தனது ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். அதிமுக ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகும் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றாமல் இன்னமும் ரசிகர் கூட்டமாக வைத்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் திருச்சியில் நடைபெற்றது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அவர்கள் ஏற்படுத்தினர். முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும்.

பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி தான் விஜய் குறித்து பிரபலம் செய்து வருகிறது. ஆனால் இதுவரை விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். விஜய் உட்ச நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதை மாற்று கருத்து இல்லை. விஜய் தொண்டர்களை முதலில் அரசியல் படுத்த வேண்டும். அதுதான் என்னுடைய வேண்டுகோள். அரசியலில் பண்பட்டவர்களாக பக்குவ பட்டவர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

ரோடு ஷோவை தடை செய்யணும்

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து ரோட் சோ கலாச்சாரத்தை பிரபலப்படுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு முதலமைச்சர முதல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ரோடு சோ நடத்தி வருகின்றனர். முதலில் தமிழகத்தில் ரோடு சோவை தடை செய்ய வேண்டும். அதற்கு முதலமைச்சர் முன்னுதாரணமாக தடை செய்துவிட்டு அவர் ரோட் ஷோ நடத்தாமல் இருக்க வேண்டும். பொதுமக்கள் தான் நமது எஜமானர்கள் அவர்களுக்கு எந்த விதமான இடையூறும் செய்யக்கூடாது முதலமைச்சர் தமிழகத்தில் ரோடு ஷோவை தடை செய்துவிட்டு அவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

பாமக குறித்து வேல்முருகன் கருத்து

பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது அப்பா மகனுக்கு உள்ள பிரச்சனை. தேர்தல் தேதி அறிவிக்கின்ற காலத்திற்குள் இந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும் என்பதுதான் எனது கணிப்பு. பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்ததற்கு நானும் ஒரு காரணம் அத்தகைய சூழ்நிலையில் அந்த கட்சி இதுபோன்று நிலையில் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக இருந்தால் தான் வன்னிய சமுதாயத்திற்கு உட்பட பல்வேறு சமுதாயத்திற்கு நல்லது.

சமூக நீதி கொள்கையிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகி அப்பா மகன் பிரச்சனைக்காக கட்சி பலவீனம் அழிந்து வருவது இது சமூக நீதிக்கு உகந்தது அல்ல. கண்டிப்பாக இருவரும் ஒன்று சேர வேண்டும். திமுக கூட்டணியில் தற்போது வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடித்து வருகிறது. திமுக கூட்டணியை விட்டு பிரிய வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒருவேளை திமுகவிற்கு மிக பெரிய கட்சிகள் கூட்டணிக்குள் புதிதாக வந்தால் அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணிக்கு தேவையில்லை என்று அவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை திமுக கூட்டணியில் தான் நாங்கள் நீடிக்க விரும்புகிறோம். தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியில் திமுக மட்டுமல்லாது அதிமுகவும் பங்கெடுப்பு உள்ளது பங்களிப்பு உள்ளது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும்.

ஆகவே அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சியிலிருந்து எடப்பாடி மட்டுமல்லாது செங்கோட்டையினும் சிக்கிவிடக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். அதிமுக ஒன்றிணைய வேண்டும். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக அரசை சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர்தான் வழி நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் ஆட்சியில் நீடிக்க 122 எம்எல்ஏக்கள் சசிகலா டிடிவி ஆகியோர்தான் காப்பாற்றினார்கள் பாஜக அல்ல.

விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு

தமிழகத்தில் அனைத்து நடிகர்களுக்கும் கூட்டம் கூடும் ஒருவேளை அஜித் நிகழ்ச்சிக்கு ஒன்று வந்தால் அவருக்கும் கூட்டம் கூடும் சமீபத்தில் நயன்தாரா சேலத்திற்கு வந்தபோது இரண்டு மடங்கு கூட்டம் வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கூட்டத்தை வைத்து விஜய்க்கு செல்வாக்கு உள்ளது என்பதை ஏற்க முடியாது. ஆனால் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது. சினிமாவில் இருந்து அரசியல் ஒருவர் வருவது என்பது ஏற்புடையது அல்ல. இது தமிழகத்திற்கு உகந்தது அல்ல என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி