
2019, 2024 தே.ஜ.கூ. நீட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம். தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தியுள்ளோம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலையில் அதிமுகவிடம் 15 தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் கேட்டிருந்தேன். ஆனால் 5 தொகுதிகளை தருவதாக சொன்னார்கள். தற்போது பேச்சுவார்த்தை நின்றுவிட்டதாக சொல்லிவிட்டார்கள். இந்த நிலையில் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. அதிமுக தேவேந்திர குல மக்களை அவமரியாதை செய்துவிட்டதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.