திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார். ஆலயத்திற்கு வந்த அவர் பொதுமக்கள் போலவே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினர். நடிகர் யோகி பாபுவுடன் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆலயத்திற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தனர். அவரை கண்ட பக்தர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்