நடிகர் சின்னி ஜெயந்த் மகன் துணை ஆட்சியராக பொறுப்பேற்பு..

By Thanalakshmi VFirst Published Oct 19, 2022, 12:20 PM IST
Highlights

திருப்பூர் சார் ஆட்சியராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் பதவியேற்று உள்ளார்.
 

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக இருந்த இவர், கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்று வந்த துணை ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு துணை ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:13 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற மிருகத்தனம்.. அதிமுக அரசின் தலைமைச் செயலாளரை விடாதீங்க.. கொதிக்கும் எஸ்டிபிஐ.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக இருந்த  சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தற்போது திருப்பூர் சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை துணை ஆட்சியராக பொறுப்பேற்ற அவர், திருப்பூர் மக்களின் நலன் சார்ந்தவையாகவே எனது முழு உழைப்பும் இருக்கும் என்று அவர் கூறினார்.  

திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் பொதுவாக திரைத்துறை செல்வதே வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சின்னி ஜெயந்த் மகன் குடிமையியல் தேர்வில் வெற்றி பெற்று, சார் ஆட்சியராக பதவியேற்றுள்ளார். 

மேலும் படிக்க:உகாண்டா அதிபரையும் மிஞ்சிவிட்டார் மு.க. ஸ்டாலின்; எடப்பாடிக்கு ஆதரவாக புதுச்சேரி அதிமுக போராட்டம்!!

click me!