உதயநிதி ஸ்டாலின் குறித்துப் பேசுகையில், "அவர் என்ன அம்பானியின் மகனா? கேள்வி கேட்டார். தமிழகத்தில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பட்டியலிடத் தான் தயார் என்றும், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தோலுரித்துக் காட்டப் போவதாகவும் அவர் சவால் விடுத்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதி மாறுவது குறித்துப் பேசிய அவர், அது மக்கள் சேவையில் ஏற்பட்ட ஆர்வத்தால் அல்ல, மாறாக ஒரு தொகுதியில் செய்த தவறுகளால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் தோல்வி பயத்தினால் எடுக்கப்படும் தந்திரம் என்று "புட்டு புட்டு வைத்தார்". செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவைக்குத் தப்பி ஓடுவதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை விளக்கிய ஆதவ் அர்ஜுனா