ஆறாம் வகுப்பு மாணவியை பல முறை கற்பழித்த 60 வயது கிழவன்… தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொது மக்கள்!!

By Selvanayagam PFirst Published Sep 8, 2018, 9:18 PM IST
Highlights

திண்டுக்கல் அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காவலாளியாக பணி புரியும் 60 வயது முதியவர் ஒருவர் முட்புதருக்குள் தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார். இதையடுத்து பொது மக்கள் அவரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் அருகே புதிதாக  கட்டப்பட்டு வரும் ரெயில்வே பாலத்தில்  குமரேசன் என்ற 60 வயது முதியவர் ஒருவர் தினக்கூலி அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பாலம் வழியாக பள்ளிக்கு சென்ற 6-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நைசாக பேசி பழகி உள்ளார்.

ஒருநாள் மாலை அந்த மாணவியை அங்குள்ள முட்புதருக்குள் அழைத்து சென்று கற்பழித்துள்ளார். மேலும், நடந்த விவரத்தை யாரிடமும் சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால், அச்சமடைந்த மாணவி இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பணப்படுத்திக் கொண்ட குமரேசன் அந்ம மாணவியை மிரட்டி பலமுறை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதேபோல, நேற்று முன்தினம் மாலையும் மாணவியை கட்டாயப்படுத்தி குமரேசன் கற்பழித்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்து ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, கிராமத்தினர் ஒன்று திரண்டு சென்று குமரேசனை  ஊருக்குள் இழுத்து வந்தனர்.

பின்னர், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமரேசனை  மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரேசன் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார

click me!