லாரி மோதியதால் தீப்பிடித்து எரிந்த கார்.. - 4 பேர் உடல் கருகி பலி

 
Published : May 19, 2017, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
லாரி மோதியதால் தீப்பிடித்து எரிந்த கார்.. - 4 பேர் உடல் கருகி பலி

சுருக்கம்

4 killed in car accident near karur

கரூர் அருகே காரின் மீது லாரி மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

கரூர் அருகே தென்னிலை நல்லியம்பாளையத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.

இதையடுத்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினரும் போலீசாரும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களின் உடல்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!