
தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
* காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம்
* சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்
* திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்
* மதுறை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
* சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம்
* சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. அங்கிட் ஜெயின் தி.நகர் துணை ஆணையராக நியமனம்
* அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்
* சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம்
* தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம்
* மதுரை வடக்கு காவல் துணை ஆணையராக இருந்த பி.கே. அரவிந்த் சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக நியமனம்
* சென்னை தெற்கு போக்குவரத்து காவல் ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமனம்
* சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியாக நியமனம்
* மயிலாடுதுறை எஸ்.பியாக இருந்த நிஷா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம்
* ஆவடி மாநகர தலைமை நிர்வாக துணை ஆணையராக இருந்த உமையாள் கோயம்பேடு துணை ஆணையராக நியமனம்.
* மதுரை மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த அரவிந்த் சிவகங்கை எஸ்.பி.யாக நியமனம்.
* சென்னை சிஐடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. இருந்த சக்தி கணேசன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்குகளை மேற்பார்வையிடும் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.
* சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக இருந்த அல்லட்டிபள்ளி பவன் குமார் ரெட்டி தாம்பரம் ஆணையரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்.
* உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த எம். ராஜராஜன் சேலம் நகரம் (தெற்கு) காவல் துணை ஆணையராக நியமனம்.
* சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வர் எஸ். சந்திரமெளலி சேலம் நகர தலைமையக துணை ஆணையராக நியமனம்.
* சென்னை கோயம்பேடு துணை ஆணையராக பி. குமார் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம்.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.