செக்ஸ்க்கு இடையூறாக இருந்த 3 மாத குழந்தை கொடூர கொலை !! ஒரு பாட்டில் இருமல் மருந்தை மொத்தமாக கொடுத்து சாகடித்த கொடூரம் !!

By Selvanayagam PFirst Published Aug 18, 2018, 12:46 AM IST
Highlights

திண்டுக்கல் அருகே உல்லாசமாக இருப்பதற்கு 3 மாத கைக்குழந்தை இடையூறாக இருப்பதாக கூறி கள்ளக் காதலனுடன் சேர்ந்து அதிக இருமல் மருதைக் கொடுத்து மயக்கமடைய வைத்து பின்னர் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்பவர்  கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா. . இவர்களுக்கு சசிபிரியா  என்ற 2 வயது குழந்தையும், கவிதாஸ்ரீ என்ற 3மாத குழந்தையும் உள்ளனர்..

கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்த வனிதா, தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறி  கூப்பாடு போட்டு கதறி அழுதார்..

இது குறித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். ஆனால் போலீசார் வனிதாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை செமையாக கவனித்து அவரிடம் இருந்து உண்மையை வரவழைத்தனர். அப்போது வனிதா அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

தனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும், கள்ளக்காதலுக்கு 3 மாத குழந்தை இடையூறாக இருந்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அருகில் இருந்த குப்பைமேட்டில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் கூறியபோது, வனிதாவுக்கும், பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த சீனிவாசனுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உல்லாசமாக இருக்கும்போது 2  குழந்தைகளும் அடிக்கடி அழுததாகவும், இதனால் மூத்த குழந்தையை கடந்த 15 நாட்களுக்கு முன்பு வனிதா தனது தாயின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.

 3 மாத குழந்தையை மட்டும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  மதியம் வனிதா, சீனிவாசனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

ஆனால் வனிதாவின் 3 மாத குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்தது. இதனால் ஆத்திரம்  அடைந்த இருவரும் ஒரு பாட்டில் இருமல் மருந்தை அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளனர். இதில் அந்தக் குழந்தை சுருண்டு விழுந்துவிட்டது.

பின்னர்  அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு குப்பைமேட்டில் போட்டு விட்டனர். விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் அவர் போலீசில் சிக்கிக்கொண்டார்.

காமம் கண்ணை மறைக்கும் என்று சொல்வதைப் போல வனிதாவும், சீனிவாசனும், ஆத்திரத்தில் 3 மாத பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

click me!