மொத்தம் 16 மாவட்டங்கள்… இன்னிக்கு மழை பிச்சிக்கிட்டு கொட்டுமாம்…

By manimegalai aFirst Published Oct 4, 2021, 7:13 AM IST
Highlights

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், சேலம், கோவை, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந் நிலையில் தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்ககடல், அதனை ஒட்டிய கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.

ஆகையால் தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுமுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், கோவை, நீலகிரி, தென்காசி, ஈரோடு, திருச்சி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

click me!