முதல்வர் ஜெ. மறைவு எதிரொலி : 10, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
முதல்வர் ஜெ. மறைவு எதிரொலி : 10, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வரும் 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக தனிக்கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு.. போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்துக்கு பலன்.. வளர்ச்சி பாதையில் இந்தியா.. பாராட்டித் தள்ளிய இபிஎஸ்!