அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. அதிரடி முடிவு !!

By Raghupati RFirst Published Mar 24, 2023, 2:30 PM IST
Highlights

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் அறிவிப்பானது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகளில், திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவலான எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது அதனை பூர்த்தி செய்யும் வகையில் தகுதி உடைய குடும்பத் தலைவியருக்கு மகளிர் உரிமைத்தொகையாக ரூ1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு வெளியானது. இதனை திமுகவினர் கொண்டாடினர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் தகுதி வாய்ந்தவர்கள் என்று பிரிப்பது சரியானது அல்ல என்று கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்.எ.ல்ஏ விஜயதாரணி, பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை அறிவிப்புக்கு முதலமைச்சருக்கு நன்றி. உரிமை தொகையை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நீடித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒருவேளை அனைவருக்கும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க..எனக்கு பாதுகாப்பு வேணும், இல்லைனா.. அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் கோர்ட்டில் மனு - வெளியான பகீர் தகவல்

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

click me!