எங்களை தனித்தனியாக அழைத்து பலாத்காரம் செய்தார்.. விருதுநகர் இளம்பெண்ணுக்கு எதிராக சிறுவன் பகீர் புகார்.!

By vinoth kumarFirst Published Apr 19, 2022, 9:08 AM IST
Highlights

ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். 

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிறுவர்களில் ஒருவர் தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாக இளம்பெண் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் பாலியல் வழக்கு

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக  ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் என 8 பேரை கடந்த மாதம் 19-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை போன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதையும் படிங்க;- ஆசை வார்த்தை கூறி ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம்.. சாதியை சொல்லி கழற்றி விட நினைத்த காதலன்.!

சிறுவன் பகீர் புகார்

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள சிறுவன் ஒருவர் தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி புகார் அளித்த இளம்பெண் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என கோரி தமிழக முதல்வர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர்நீதிமன்ற பதிவாளர், உள்துறைச் செயலர், ஐஜி, டிஐஜி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், மாவட் சட்ட உதவி மைய தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல்

அதில், "ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அவர் எங்களை மிரட்டினார். ஆனால், போலீசார் எங்களை கைது செய்தபோது விவரத்தை கூறினேன். இளம்பெண்ணின் செல்போனை பார்த்தால் உண்மை தெரியும் என்றும் கூறினேன். ஆனால், போலீசார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இளம்பெண்

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு சென்ற பின்னரும் சிபிசிஐடி போலீசாரிடமும் இதை தெரிவித்தேன். ஆனால், இந்த விபரத்தை வெளியில் தெரிவிக்கக் கூடாது என என்னை மிரட்டினார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிறுவர் சிறையில் இருந்தபோது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். நான் 18 நாள்கள் சிறையில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மன வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. திமுக நிர்வாகி உள்பட 8 கைது.!

click me!