செங்கல் சூளையில் ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி கணவன், மனைவி பலி - போலீசார் விசாரணை

By Velmurugan sFirst Published Sep 19, 2023, 5:06 PM IST
Highlights

வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கணியம்படி புதூரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(வயது 40). இவரது மனைவி அமு (55). மகள்கள் சத்தியா(15), சினேகா(13), மகன் அரவிந்த்(12). தெய்வசிகாமணியும், அமுலுவும் அதே ஊரில் ஏரியில் இயங்கி வரும் புதூரைச் சேர்ந்த பழனி என்பவரின் செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைப்பதற்காக தீ மூட்டப்பட்டிருந்ததால், பாதுகாப்புக்காக சூளையை ஒட்டியுள்ள அறையில் தம்பதியினர் தங்கியுள்ளனர். 

மேலும் செங்கல் சூளையில் செங்கற்கள் வேக வைப்பதற்காக மூட்டப்பட்டிருந்த தீ அணையாமல் இருப்பதற்காக சூளையை ஒட்டியுள்ள அறையுடன் இணைத்து தார்பாய் போட சூளை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு வேலூர், கணியம்பாடி உட்பட மாவட்ட முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்த சூளையில் வைக்கப்பட்டிருந்த தீ அணைந்தது. இதனால் உருவான கரும் புகை குபு, குபுவென பரவி சூளை மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள சிறிய அறையிலும் சூழ்ந்தது. 

கூட்டணி குழப்பத்தை சரி செய்ய டெல்லி தலைவர்கள் வரவேண்டும் - கிருஷ்ணசாமி அழைப்பு

இதனால் தூக்கத்தில் இருந்த கணவனும், மனைவியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறியுள்ளனர். ஆனால் நள்ளிரவு என்பதால் இவர்களது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் காப்பாற்ற யாருமின்றி கணவனும், மனைவியும் அறையிலேயே மயங்கினர். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் அதே சூளையின் பக்கத்தில் இயங்கி வரும் மற்றொரு செங்க சூளையின் உரிமையாளரான சீனிவாசன், பழனியின் சூளையை கடந்து சென்றபோது அங்குள்ள அறையில் இருந்து அமுலுவின் முனகல் சத்தம் கேட்டு கதவை தட்டியுள்ளார். 

கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது தெய்வசிகாமணியும், அமுலுவும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

பாஜக கூட்டணி முறிவு? எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்போம் - எஸ்.பி.வேலுமணி பரபரப்பு

மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஆய்வாளர் ராஜன்பாபு தலைமையில் வேலூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் வேலூர் தாசில்தார் செந்தில், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!