தள்ளுபடியாகிறதா தமிழக விவசாயிகளின் கடன் ?? எப்போது ?? அமைச்சரின் தகவல் ..

Published : Aug 17, 2019, 11:10 AM IST
தள்ளுபடியாகிறதா தமிழக விவசாயிகளின் கடன்  ?? எப்போது ?? அமைச்சரின் தகவல் ..

சுருக்கம்

தமிழகத்தின் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்கிற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு திருச்சியில் பதிலளித்து  உள்ளார் .

திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர் .

அப்போது தமிழ்நாட்டில் விவசாய கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று கேட்டனர் . அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு ,
விவசாய கடன் தள்ளுபடிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனவும் , தமிழகத்தில் 90 சதவீத விவசாயிகள் தங்கள் கடனை முறையாக செலுத்தி வருகிறார்கள் எனவும் , அதனால் விவசாய கடன் தள்ளுபடி என்பது தமிழ் நாட்டை பொறுத்தவரை தேவையற்றது என்று தெரிவித்தார் .

முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது .அதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி ஆகியோர் பங்கு பெற்றனர் .

PREV
click me!

Recommended Stories

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!
திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்