"இவ்வளவு பெருசா வளந்துருக்கீங்க .. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுனா என்னவாம் "???.. - சின்ன பசங்களின் அட்வைஸ் .. காவல்துறையின் வித்தியாச முயற்சி ..

Published : Aug 16, 2019, 04:49 PM ISTUpdated : Aug 16, 2019, 04:51 PM IST
"இவ்வளவு பெருசா வளந்துருக்கீங்க  .. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுனா  என்னவாம் "???.. - சின்ன பசங்களின் அட்வைஸ் .. காவல்துறையின் வித்தியாச முயற்சி ..

சுருக்கம்

ஹெல்மெட் போடாமல் வருபவர்களை பிடித்து சின்ன பசங்களை வைத்து அறிவுரை வழங்க செய்த சம்பவத்தை காவல்துறையினர் திருச்சியில் அரங்கேற்றினர் .

நாடெங்கும் விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . தலைக்கவசம் இல்லாமல் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன . இதை தடுக்க , தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தினாலும் , அதை பெரும்பாலானோர் கேட்பதாக இல்லை .

இதனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துதுள்ளது . அதன்படி இனி தலைக்கவசம்  இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் 100 இல் இருந்து 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது .

இந்த நிலையில் தான் தலைக்கவசம் அணியும் அவசியத்தை இன்னும் நன்றாக அதை பின்பற்றாதவர்களுக்கு  உணர்த்த வேண்டும் என நினைத்த காவல்துறை ஒரு முயற்சியை கையில் எடுத்தனர் .

அதன்படி திண்டுக்கல் - திருச்சி சாலையில் தலைக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் . அதில் சின்ன பசங்களை அழைத்து வந்து தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு அறிவுரை கூற வைத்தனர் . இது போன்ற குழந்தைகள் சொன்னாலாவது இனி மறக்காமல் ஹெல்மெட் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் காவல்துறை செய்திருக்கிறது .

மேலும் தற்காலிகமாக ஒரு ஹெல்மெட்டை அணியச்சொல்லி வண்டியை ஓட்டிக்காட்ட வைத்தார்கள் .

சின்ன பசங்க முதற்கொண்டு இறங்கி வந்து சொல்லியாச்சு ... இனிமேலாவது மறக்காம ஹெல்மெட் போடுங்க மக்களே .........

PREV
click me!

Recommended Stories

ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?