14 கிலோமீட்டர கடக்க 2 மணி நேரமா ?? இதுக்கு பேரு சூப்பர் பாஸ்ட் பஸ்சா ?? - காண்டான பயணிகள்.. திருச்சியில் சாலை மறியல் ...

Published : Aug 16, 2019, 11:21 AM ISTUpdated : Aug 16, 2019, 11:41 AM IST
14 கிலோமீட்டர கடக்க  2 மணி நேரமா ?? இதுக்கு பேரு சூப்பர் பாஸ்ட் பஸ்சா ??   - காண்டான பயணிகள்.. திருச்சியில் சாலை மறியல் ...

சுருக்கம்

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் அதிவிரைவு பேருந்து ஒன்று மிகவும் மெதுவாக ஆமைவேகத்தில் சென்றதால் ,அதில் பயணம் செய்த பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .

நேற்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக சுமார் 40 பயணிகள் ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்தனர் . அது அதிவிரைவுடன் கூடிய குளிர்சாதன பேருந்து ஆகும் . அதில் சென்றால் விரைவாக சென்றுவிடலாம் என்று பலர் நினைத்து இருந்தனர் .

ஆனால் நடந்தது வேறு .  திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிளம்பிய இந்த பேருந்து சமயபுரம் நெ.1 சுங்கச்சாவடி வரை கடக்க வேண்டிய தூரமான  14 கிலோமீட்டரை சுமார் 2 மணி நேரமாக கடந்து உள்ளது . 

இதனால் ஆத்திரம் கொண்ட பயணிகள் , ஓட்டுனரிடமும் நடத்துனரிடமும் சண்டையிட்டனர் . பேருந்து ஏசியில் ஏற்பட்ட பழுது தான் இதற்கு காரணம் என்று அவர்கள் கூறினர் .மாற்று பேருந்தும் ஏற்பாடு செய்யாததால்  ஆத்திரம் தீராத பயணிகள் , திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய தொடங்கினர் .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கொள்ளிடம் மற்றும் லால்குடி காவல் துறை வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் . அதை தொடர்ந்து பயணிகள் சாலை மறியலை கை விட்டனர் .

இதனால் அங்கு 15 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது .. 

PREV
click me!

Recommended Stories

ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?