கல்யாணம் ஆகி 26 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சந்தேகம்... 47 வயது மனைவியை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?

Published : May 08, 2024, 07:55 AM ISTUpdated : May 08, 2024, 07:58 AM IST
கல்யாணம் ஆகி 26 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சந்தேகம்... 47 வயது மனைவியை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரெஜினாமேரி (47). இந்த தம்பதிக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரெஜினாமேரி (47). இந்த தம்பதிக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதில் சதீஷ்குமார் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். வர்ஷினி கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க: இன்ஸ்டா நண்பனை நம்பி சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்! வீடியோவை வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பிய இளைஞர்கள்!

இந்நிலையில், நாகேந்திரனுக்கு திடீரென தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மனைவி ரெஜினா மேரி ஓசூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே  முத்தையாபுரத்தில் வசித்து வந்த வீடு ரெஜினா மேரி பெயரில் உள்ளது. அதை ரெஜினா மேரி பெயரிலும், கணவர் நாகேந்திரன் பெயரிலும் சேர்த்து மாற்றம் செய்வதற்கு குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெஜினாமேரி சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக ரெஜினா மேரியை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து நாகேந்திரன் தப்பிச்சென்றுவிட்டார். 

இதையும் படிங்க:  சிகரெட்டால் சூடு! கணவனை கட்டிப் போட்டு கதற விட்ட மனைவி! வீடியோவுடன் வசமாக சிக்கிய பெண்ணை தட்டித்தூக்கிய போலீஸ்

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு ரெஜினா மேரியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரெஜினா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!