திருவண்ணாமலையில் கார்- லாரி நேருக்கு நேர் மோதல்... 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

Published : Aug 13, 2019, 02:12 PM IST
திருவண்ணாமலையில் கார்- லாரி நேருக்கு நேர் மோதல்... 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

சுருக்கம்

திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருவண்னாமலையில் அய்யம்பாளையம் பகுதிக்கு அருகே கர்நாடகாவுக்கு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில் 2 பெண் உட்பட 5 பேர் பயணம் செய்தனர். அப்போது செங்கம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேராக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?