திருப்பூர் அருகே பயங்கர விபத்து; தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கட்டிட தொழிலாளி; சிசிடிவி காட்சி வைரல்!!

Published : Aug 19, 2023, 08:28 AM IST
திருப்பூர் அருகே பயங்கர விபத்து; தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கட்டிட தொழிலாளி; சிசிடிவி காட்சி வைரல்!!

சுருக்கம்

பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கட்டிட தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பலியானார். இந்த் கோர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் பணியை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவையைச் சேர்ந்த நாகராஜ் தனது இரண்டு வயது மகன் வர்ஷன் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் ஆகியோருடன் மதுரையில் இருந்து கோவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். 

68 வயது மூதாட்டி கதற கதற கற்பழித்து கொலை; காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது எதிரே வந்த நாகராஜின் கார் மோதி தூக்கி வீசப்பட்டார். சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் நாகராஜின் இரண்டு வயது மகனும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன்? எதற்கு? எத்தனை நாள்? முழு விபரம் இதோ !!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!