மெயின் அருவி தடாகத்தில் உள்ளிழுக்கும் மர்மம் !! குற்றாலத்தில் தொடர்கதையாகும் சம்பவம்

Published : Aug 14, 2019, 11:10 AM IST
மெயின் அருவி தடாகத்தில்  உள்ளிழுக்கும் மர்மம் !! குற்றாலத்தில் தொடர்கதையாகும் சம்பவம்

சுருக்கம்

குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் விழுந்து பலியாகும் சம்பவம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

குற்றால அருவிகளில் தற்போது நன்றாக தண்ணீர் விழுகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது . அப்படி வருபவர்களில் பலர் குளிக்கும் ஆர்வத்தில் முண்டியடித்து செல்கின்றனர் . அப்போது ஆர்ப்பரிக்கும் அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு தடாகத்தில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது .

இது குறித்து காவல்துறையினர் முறையான எச்சரிக்கை செய்தும் சிலர் அதை கண்டு கொள்வதில்லை . இதனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது .

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சூரியநாராயன் (20) தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு குளிக்க வந்தார் . அவர்கள் அனைவரும் மெயின் அருவியில் இரவு 10 மணிக்கு மேல் குளித்தனர் . பின்னர் ஊருக்கு கிளம்பலாம் என்ற போது சூரியநாராயனை மட்டும் காணவில்லை . பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத காரணத்தால் அங்கு கண்காணிப்பில்  இருந்த காவல்துறையிடம் புகார் அளித்தனர் .

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மெயின் அருவி தடாகத்தில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக தகவல் வந்தது . விசாரணை செய்ததில் அது காணாமல் போன சூரியநாராயணன் என்று தெரிந்தது .

காவல்துறையினர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!