Lawyer Murder News: சினிமா பாணியில் வழக்கறிஞரை சுத்துப்போட்ட கும்பல்.. இறுதியில் நடந்தது என்ன?

Published : Aug 21, 2024, 01:06 PM IST
Lawyer Murder News: சினிமா பாணியில் வழக்கறிஞரை சுத்துப்போட்ட கும்பல்.. இறுதியில் நடந்தது என்ன?

சுருக்கம்

வழக்கறிஞர் சரவணராஜ் பாளையங்கோட்டையில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் சரவணராஜ் (41).  இவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் அருகே சாலையில் மற்றொரு வழக்கறிஞரான சாம் ராபின் (28) என்பவருடன் சரவணராஜ் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரவணராஜை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.  இதனை தடுக்க வந்த சாம் ராபினையும் மர்ம கும்பல் தாக்கினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சென்னை பிரமுகருக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சனையால் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.