Theni Accident: கல்லூரிக்கு பீஸ் கட்டுவதற்காக வேலைக்கு சென்ற மாணவனுக்கு எமனாக வந்த மினி பேருந்து

Published : May 31, 2024, 12:13 PM ISTUpdated : May 31, 2024, 12:16 PM IST
Theni Accident: கல்லூரிக்கு பீஸ் கட்டுவதற்காக வேலைக்கு சென்ற மாணவனுக்கு எமனாக வந்த மினி பேருந்து

சுருக்கம்

தேனியில் கல்லூரி படிப்பு செலவுக்காக பகுதிநேர வேலைக்குச் சென்ற மாணவன் பராமரிப்பில்லாத மினி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரி(வயது 20). இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த நிலையில், விடுமுறை நாட்களில் தச்சு வேலை பார்ப்பதற்காக வெற்றி திரையரங்கம் அருகே உள்ள மரம் இழைப்பக ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு வாங்குவதற்காக வெற்றி திரையரங்கம் அருகே நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  

ஏரியாவ சுத்தம் பண்ண முடியாது, உன்னால முடிஞ்சத பு....க்கோ டா; திமுக கூட்டணி கட்சி கவுன்சிலரின் கணவர் அராஜகம்

அப்போது தேனியில் இருந்து பூதிபுரம் நோக்கி சென்ற மினி பேருந்து தாறுமாறாக ஓடிய நிலையில் ஹரி மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பூதிபுரத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் மினி பேருந்தை ஓட்டி வந்த நிலையில், அவருக்கு வலுப்பு ஏற்பட்டதாகவும், அதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் காவல்நிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரே பையா, இங்கயும் வந்துட்டீங்களா! டெல்டா மாவட்டத்தில் இந்தி பாட்டு பாடிக்கொண்டு பிசியாக நாற்று நடும் வடமாநில இளைஞர்கள்

விபத்துக்குள்ளான மினி பேருந்து முறையான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையிலும், முறையான ஆவணங்கள் இன்றி இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வாகனத்தை ஓட்டிய அஜித் என்பவர் இந்த விபத்து வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு வலிப்பு வந்ததாக கூறினாரா அல்லது  வாகனம் முறையாக பராமரிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட பாவிங்களா! ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு கணவர் போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
500 ஆண்டு பழமையான கோயில் அபகரிப்பு: அமைச்சரின் மாஜி உதவியாளருக்கு எதிராக சீறிய மக்கள்