தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் தாக்குதல்.. சாதி வெறி கும்பல் அட்டகாசம்..!

By vinoth kumarFirst Published Nov 30, 2021, 7:49 AM IST
Highlights

போதையில் இருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ் தெரிவித்தார்.

தஞ்சையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே கருப்பூர் வீராணர் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சதீஷ்குமாருக்கு, அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரை பார்க்க தொண்டராம்பட்டு கிராமத்திற்கு வந்திருந்தனர். 

அப்போது, எதிர்பாராத விதமான தனது உறவினரை பார்த்ததுமே காரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். கார் போக்குவரத்து இடையூறாக இருப்பதால் ரிவர்ஸ் எடுத்து ஓரமாக நிறுத்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அவரது உறவினரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கு இருந்த சில இளைஞர்கள் ஏன் இரு சக்கர வாகனம் மீது காரை மோதினாய் என கேட்டு உள்ளனர். அதற்கு சதீஷ் இது தனது அண்ணன் இருசக்கர வாகனம் தான் என கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ் தெரிவித்தார்.

அப்போது நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞனா என கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை கேட்ட உறவினர் மற்றும் தந்தையையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, படுகாயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!