நீலகிரியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 5 வயது சிறுமி அதே வாகனத்தில் சிக்கி பலி

Published : Nov 28, 2023, 04:16 PM ISTUpdated : Nov 28, 2023, 04:38 PM IST
நீலகிரியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 5 வயது சிறுமி அதே வாகனத்தில் சிக்கி பலி

சுருக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள  கூக்கல்துறை ஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி, ஷோபனா தம்பதியினர். இவர்களுக்கு பிரணவ், (வயது 7), லயா (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் லயா கேர்கம்பை பகுதியில் உள்ள இல்போர்ட் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று மாலை பள்ளி விட்டதும் பள்ளி வாகனத்தில் குழந்தை லயா சொந்த ஊரான கூக்கல்துறைக்கு சென்றதாகவும், வாகனத்தை கூக்கல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஊர் வந்து சேர்ந்தவுடன் வாகனத்தில் இருந்து இறங்கி லயா  வாகனத்தின் பின்புறத்தில் சென்றதாக தெரிகிறது. அப்பொழுது வாகன ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை லயா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்திற்கு காரணம் பள்ளி வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஒருவர் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் வாகனத்தில் பள்ளியை சேர்ந்தவர்கள் யாரும் இல்லாததால் ஓட்டுநர் மட்டும் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை

தகவல் அறிந்த கோத்தகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த குழந்தை லயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓட்டுநர் தியாகராஜன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தலைமறைவான ஓட்டுனர் தியாகராஜனை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!