30 வருடமாக குழந்தை விற்பனை! பகீர் தகவலை வெளியிட்ட நர்ஸ்!

By manimegalai aFirst Published Apr 25, 2019, 6:41 PM IST
Highlights

நாமக்கல் அருகே கடந்த 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து செவிலியர் ஒருவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 

நாமக்கல் அருகே கடந்த 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து செவிலியர் ஒருவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் ஆகியவற்றை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த கும்பலை சேர்ந்த நர்ஸ் ஒருவர், விருப்ப ஓய்வு பெற்று இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளது அதிர்ச்சிடைய செய்துள்ளது.

அதிலும் இவர்கள் ஆண் குழந்தையின் அழகான தோற்றம், கலர் 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்த செவிலியர், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும். குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த செவிலியரின் இந்த ஆடியோ பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாக தமிழக சுகாதார துறை செயலார் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது குழந்தை விற்பனையில் ஈடுபட்ட நர்ஸ் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது
செய்யப்பட்டு, தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில் இன்னும் பலர் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் 3 குழந்தைகளையும் ஓமலூர் மற்றும் கொல்லிமலையில் விற்பனை செய்துள்ளதாக அமுதவல்லி ஒப்புக்கொண்டனர் என்பது க்ருய்ப்பிடத்தக்கது.

click me!