கிடுகிடுவென உயரும் வைகை அணையின் நீர்மட்டம் !! முல்லைப்பெரியாறு அணை திறப்பு .. விவசாயிகள் மகிழ்ச்சி ..

Published : Aug 19, 2019, 03:46 PM IST
கிடுகிடுவென உயரும்  வைகை அணையின் நீர்மட்டம் !! முல்லைப்பெரியாறு அணை திறப்பு .. விவசாயிகள் மகிழ்ச்சி ..

சுருக்கம்

முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது .

மதுரை மற்றும் அதனை சுற்றி இருக்கும் தென்மாவட்டங்களின் நீர்த்தேவைகைளை பூர்த்தி செய்து வருவது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருக்கும் வைகை அணையாகும் . தற்போது அங்கு நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது .

அதே நேரத்தில் கேரளா மாநிலத்திலும் மழை பெய்து வருவதால் , முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்  பட்டுள்ளது . இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1500  கன அடியாக உயர்ந்துள்ளது .

29 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் , முல்லை பெரியாறு அணையில் இருந்து வரும் நீரால் கிடுகிடுவென உயர்ந்து 46 அடியாக ஏறியுள்ளது .  இது இன்னமும் உயரும் என்று எதிர்பார்க்கப்  படுகிறது .அணையில் இருந்து 60 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது ..

வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .

PREV
click me!

Recommended Stories

மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?