உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் காலமானார்..!

By vinoth kumarFirst Published May 23, 2023, 8:48 AM IST
Highlights

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன்(70). மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாக கருமுத்து கண்ணன் செயல்பட்டு வந்தார். 


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக அறங்காவலராக இருந்த கரு.முத்து கண்ணன் (70) உடல் நலக்குறைவவால் இன்று காலமானார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன்(70). மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாக கருமுத்து கண்ணன் செயல்பட்டு வந்தார். 

மேலும், பல நூற்பாலைகளின் தலைவராகவும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருமுத்து கண்ணன்(70) இன்று காலமானார். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

click me!