கடன் பிரச்சனை.. நகை பட்டறை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

Published : May 11, 2021, 02:06 PM IST
கடன் பிரச்சனை.. நகை பட்டறை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

சுருக்கம்

 உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை உரிமையாளர் சரவணன். இவருக்கு மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), என்ற 2 மகள்களும், அமுதன் 5 என்ற ஒரு மகனும் இருந்தனர். பல வருடங்களாக நகை பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன், கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பல்வேறு  பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில். இன்று காலையில் சரவணன், ஸ்ரீநிதி, இருவரும் தங்கள் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?