அத்திவரதரை காண வராத மோடி .. சென்னை வந்தும் காஞ்சிபுரம் செல்லாத அமித்ஷா .. காரணம் என்ன தெரியுமா ??

By Asianet TamilFirst Published Aug 20, 2019, 3:50 PM IST
Highlights

48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தை காண பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவில்லை . அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது .

1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . 

குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

அத்திவரதர் வைபவத்தை காண பிரதமர் மோடி வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப் பட்டது . முதலில் ஜூலை 31 இல் சயன கோலத்தில் அத்திவரதரை தரிசிக்கும் மோடி பின்னர் ஆகஸ்ட் 1 இல் நின்ற கோலத்தையும் தரிசிப்பார் என்று  அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்தன . எனினும் பிரதமர் மோடி வரவில்லை . பின்னர் ஒரு நாளில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது .

தமிழக பாஜக சார்பிலும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம் . ஆனால் அதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிகிறது . பிரதமர் வராததற்கான காரணம் என்ன என்று விசாரித்த போது , ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படும்  என்று கூறப்பட்டதாம் . 

பிரதமருக்கும் கடந்த சில நாட்களாக அதிகமான அலுவல் பணிகளும் , பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதா பணிகளும் அதிகளவில் இருந்ததால் அவரால் அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . 

சென்னையில்  கடந்த 11 ம் தேதி துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா  வந்திருந்தார் . ஆனால் அவரும் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்கவில்லை . புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட கர்நாடக சென்றுவிட்டார் .

click me!