நிறைவு பெறுகிறது அத்திவரதர் வைபவம்!! 17 இல் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் - காஞ்சிபுரம் ஆட்சியர் உறுதி

Published : Aug 13, 2019, 01:30 PM IST
நிறைவு பெறுகிறது அத்திவரதர் வைபவம்!!  17  இல் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் - காஞ்சிபுரம் ஆட்சியர் உறுதி

சுருக்கம்

1979 ற்கு பிறகு 2019 இல் வெளி வந்த அத்திவரதர் , இனி நாற்பது ஆண்டுகள் கழித்து 2059 இல் தான் காட்சி தருவார் . அதனால் இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..   

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது . இறுதி நாளான ஆகஸ்ட் 17 அன்று ஆகம விதிகளின் படி முறையான பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் மீண்டும் வைக்கப்பட இருக்கிறார் .

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :

"ஆகஸ்டு 15-ம் தேதியுடன் முக்கிய பிரமுகர்கள் தரிசனமும், ஆகஸ்டு 16-ம் தேதியுடன் பொது தரிசனமும் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு உரிய ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் வரும் ஆகஸ்டு 17-ம் தேதி அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறார்.

கடந்த 41 நாட்களில் அத்தி வரதரை சுமார் 80 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்" என்று கூறினார் . 

1979 ற்கு பிறகு 2019 இல் வெளி வந்த அத்திவரதர் , இனி நாற்பது ஆண்டுகள் கழித்து 2059 இல் தான் காட்சி தருவார் . அதனால் இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..   

PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்