திருவள்ளூரை நெருங்கும் செங்கல்பட்டு... ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

By vinoth kumarFirst Published May 18, 2020, 4:48 PM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  538ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  538ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த  அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 498 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

click me!