காதலியுடன் கருத்து வேறுபாடு; ரூ.70 லட்சம் பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மருத்துவர்

By Velmurugan sFirst Published Jan 27, 2023, 10:50 AM IST
Highlights

காஞ்சிபுரத்தில் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூ.70 லட்சம் மதிப்பிலான தனது பென்ஸ் சொகுசு காரை இளம் மருத்துவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள குலைக்கரை அருகே சொகுசு கார் ஒன்று  தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

கோவை, மதுரையில் இருந்து பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இது குறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்(வயது 28) என்பவருக்கு சொந்தமான கார் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கவின் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில்  மருத்துவம் பயின்று கடந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்த நிலையில் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி காவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

விண்ணை முட்டும் அரோகரா முழக்கம்..16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது..!

இந்தநிலையில் தான் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனது  காதலியுடன் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவின்  தனக்கு சொந்தமான ரூ.70லட்சம் மதிப்பிலான பென்ஸ் சொகுசு காரினை  பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது தெரிய வந்தது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காஞ்சி தாலுக்கா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபத்திற்கும் எல்லை உண்டு. இங்கு பலரும் தங்களது அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் போது காதலியுடனான சண்டையால் 70 லட்சம் மதிப்பிலான காரையா கொளுத்துவது என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

click me!